வவுனியா இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் (காணொளி)

315 0

வவுனியா இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

வுவுனியா மத்திய பேருந்து நிலையத்தை மீண்டும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக வவுனியா இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாணசபையின் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனின் உருவபொம்மைக்கு பாடை கட்டி கொள்ளிக்குடம் வைத்திருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.

பணிப் பகிஸ்கரிப்பு நடைபெறும் இலங்கை போக்குவரத்துச்சபை அலுவலகத்திற்கு வருகை தந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன் போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்த இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர் சங்கத்தின் தலைவர் த.வாமதேவன், தங்களுக்கு பழைய பேருந்து நிலையம் வழங்கப்படுமிடத்து போராட்டம் கைவிடப்படும் என்று கூறினார்.