ஹெரோயின் கடத்தல் – இலங்கையர் உட்பட்ட ஏழு இந்தியர்கள் கைது

257 0

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஹெரோயின் கடத்த முற்பட்ட நான்கு இலங்கையர்கள் உட்டபட்ட ஏழு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய சுங்க திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இவர்களிடமிருந்து ஆறு கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகத்திற்குரியவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய சுங்கவரித்துறையின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மோதரை – கோவில் வீதியில் கோவிலுக்கு அருகில் 2 கிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்ட இந்த இளைஞர் 21 வயதுடையவர் எனவும் இவர் மோதர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.