தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது

238 0

தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஐந்து மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சுமார் 386 படகுகளில் இந்திய கடற்தொழிற்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றுள்ளனர்.

இவர்களில் ஐந்து பேர் மீன்பிடியில் ஈடுபட்டநிலையில் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.