நெடுந்தீவு கடற்பரப்பில் ஐந்து இந்திய மீனவர்கள் கைது!

221 0

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றய தினம் இரவு  8 மணியளவில் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஐகதாலப்பட்டினத்தை சேர்ந்த  ஐந்து மீணவர்களும் அவர்களின் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவர்கள்  ஐவரும்  இன்றைய தினம்  ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர் என கடற்தொழில் நீரியல் திணைக்கள பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்தார்.