அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி சத்தியப்பிரமாணம் எடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட உறுதி மொழியில், ஒரே இனம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பாக ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளில் இது குறித்து பயன்படுத்தப்பட்டுள்ள சொற்பிரயோகங்கள் தொடர்பாக தெளிவக ஆராய்ந்த பின்னர் வடக்கு மாகாணசபையின் அடுத்த அமர்வில் இதற்கான எதிர்ப்பை வடக்கு மாகாணசபை வெளியிடும் என்று அவைத்தலைவர் சபையில் அறிவித்தார்.