2026ஆம் ஆண்டளவில் இலங்கையின் கடன் 3 ட்ரில்லியன்

255 0

2026ஆம் ஆண்டளவில் 3 ட்ரில்லியன் கடன் தொகையை அரசாங்கம், மீள செலுத்த வேண்டியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போது நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி உள்ளது.

இந்த நிலையில், இது 2026ஆம் ஆண்டு ஆகும் போது நாட்டில் கடன் 3 ட்ரில்லியன் ஆக இருக்கும்.

அந்த கடனை செலுத்துவதற்கு நாட்டின் வருமானத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்.

அதற்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியம்.

எனவே அதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் லக்மன் யாபா அபேவர்தன கோரிக்கை விடுத்தார்