நாக்கின் கீழ் தங்க பிஸ்கட்டுக்களை மறைத்து வைத்து இந்தியாவுக்கு கொண்டு செல்ல முற்பட்ட சகோதர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து, சுங்க அதிகாரிகள் இன்று காலை கைது செய்துள்ளனர்.
இதன்போது இவர்களிடம் இருந்து 4 தங்க பிஸ்கட்டுக்கள் மீட்கப்பட்டன.
இதன் பெறுமதி 10 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏறாவூர் – மாவடி வீதிப் பகுதியில் டி 56 ரக துப்பாக்கியை வைத்திருந்த ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
அத்துடன், டி 56 ரக துப்பாக்கித் தோட்டக்களும் கைப்பற்றப்பட்டன.
ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.