அரசாங்கம் எதேச்சதிகாரத்தை நோக்கிப் பயணிக்கின்றது – மஹிந்த குற்றச்சாட்டு

300 0

தற்போதைய அரசாங்கம் எதேச்சதிகாரத்தை நோக்கிப் பயணிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் மல்வத்து மாநாயக்க தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடியானது நாட்டுக்கு அகௌரவமாகும்.

அதன் உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

ஆனால், அரசாங்கம் அதைக் கைவிடப் பார்க்கின்றது.

வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முதலில் நிறைவேற்ற வேண்டும்.

இந்த விடயங்களின் நகர்வுகள் குறித்து அவதானித்து வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.