கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரம் குறித்து கோரிக்கை

210 0

கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கணக்காய்வாளர் என்பவர் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே பொறுப்புக்கூற வேண்டியவராவார்.

அமைச்சர்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய தேவை அவருக்கு இல்லை.

எனவே, கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்க தாம் ஆதரவு வழங்குவதாக ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா தெரிவித்துள்ளார்.