வடமாகாண அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றதன் பின்னரே கனடா சென்றேன் – சீ.வி விக்னேஸ்வரன்

235 0

கனடா ஒன்றாரியோ மாநிலத்திற்கா ன விஜயம் தொடர்பாக வடமாகாண அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றதன் பின்பாகவே சென்றிருந்தேன் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் எதிர்கட்சி தலைவரு க்கு பதிலளித்துள்ளார்.

வடமாகண சபையின் 83ம் அமர்வு இன்றைய தினம் மாகாணசபை பேர வை செயலகத்தின் சபா மண்டபத்தி ல் நடைபெற்றிருந்தது.

இதன்போது எதிர்கட்சி தலைவர் சி.தவராசா முத லமைச்சரை நோக்கி கனடா நாட்டின் ஒன்றாரியோ மாநிலத்தின் பிறம்ப்ர ன், மார்க்கம் நகரங்களுக்கும் முறை யே முல்லைத்தீவு, வவுனியா நகரங் களுக்கிடையிலும் செய்யப்பட்ட உட ன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிரு ந்தது.

இதனடிப்படையில் இந்த உடன் படிக்கை குறித்து அமைச்சரவைக்கு கூற்பட்டதா?

வரைபின் உள்ளடக்கம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டதா?

இந்த ஒப்பந்தத்தின் வரைபு மாகாண சபைக்கு ங்கப்படுமா?

முல்லைத்தீவு மாவட்ட செயலர், வவுனியா நகரச பை தலைவர் ஆகியோரின் ஒப்புதல் பெறப்பட்டதா? என முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், 27ம் திகதி மாகாண அமைச்சரவைக்கு கூறப் பட்டுள்ளது.

மேலும் ஒப்பந்தத்தின் வரைபு அமைச்சரவைக்கு தெளிவுபடு த்தப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் வரைபு பொருத்தமான சந்தர்ப்பத்தில் ச பைக்கு சமர்பிக்கப்படும், மேலும் முல் லைத்தீவு மாவட்ட செயலர், வவுனியா நகரசபை தலைவர் ஆகியோரின் ஒப்புதல் பெறவேண்டிய அவசியம் இ ல்லை என பதிலளித்துள்ளார்.