பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை-ராஜித சேனாரத்ன

275 0

பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மாகாண சுகாதார அமைச்சர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் நாடு பூராகவும் உள்ள 20 தோட்டப்புற வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக சுகாதார அமைச்சு கடந்த 2016 ஆம் ஆண்டில் 41 கோடி ரூபாவை ஒதுக்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.