நாடு பொருளாதார ரீதியில் முன்னெற்றம்அடைவதற்கும் இன்னும் மூன்று ஆண்டுகள் தேவை-சுஜீவ சேனசிங்க

250 0

நாடு பொருளாதார ரீதியில் முன்னெற்றம்அடைவதற்கும், அபிவிருத்தியடைவதற்கும் இன்னும் மூன்று ஆண்டுகள் தேவை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க,மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை இரண்டு வருடங்களில் அபிவிருத்தி செய்ய முடியாது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சில நாடுகள் அபிவிருத்திக்காக 20 வருடங்கள் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் இலங்கையின் அபிவிருத்திக்கு இன்னும் மூன்று வருடங்கள் போதும் என சுஜீவ சேனசிங்க கூறியுள்ளார்.

அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் நாட்னெ் அபிவிருத்திக்கு மூன்று வருடங்கள் போதும் எனவும் இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், இலங்கையை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.