சாய்ந்தமருதில் விபத்து – மூன்று பேர் பலி – 10 பேர் காயம்

211 0

அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் சிற்றுந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

சம்பவத்தில் மேலும் பத்து பேர் காயமடைந்து கல்துமுனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மூவரும் பாலமுனையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இன்று அதிகாலையில் தம்புள்ளை ஹபரண பிரதேசத்தில் பேருந்தொந்து ஒன்று குடைசாய்ந்ததில் 15 பேர் காயமடைந்தனர்.

பொலனறுவையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் ஹபரண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.