பிலிப்பைன்ஸில் ராணுவம் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் 15 கிளர்ச்சியாளர்கள் பலி

240 0

பிலிப்பைன்ஸில் ராணுவம் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் 15 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் மாகாணத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

குறித்த பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை ஆதரிக்கிற அபு சயாப் கிளர்ச்சியாளர்கள் உள்ளனர்.

அந்த கிளர்ச்சியாளர்களை அழிக்கும் நடவடிக்கையில் தற்போது பிளிப்பைன்ஸ் ராணுவம் ஈடுப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் 15 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதுடன், அந்த இயக்கத்தின் தலைவர் காயமடைந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.