நிபந்தனைகளுடனான ஜீ.எஸ்.பி வரிச்சலுகை – நாடு முன்னேறாது – மஹிந்த

237 0

நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜீ.எஸ்.பி வரிச்சலுகை பெறப்படும்பட்சத்தில் நாடு என்ற வகையில் அபிவிருத்தியை எட்ட முடியாதுபோகும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

யுத்தத்தை நிறைவு செய்து பாதுகாக்கப்பட்ட இலங்கையின் பாரம்பரியங்களை மறந்துவிட்டு புதிய தலைமுறையினருக்கு மேற்கத்தைய கலாசாரத்தை புகுத்த முனைவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கான நிபந்தனைகள் நாட்டின் நலன்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.