தமிழ்த் தலைவர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியே சுமந்திரன் மீதான கொலை முயற்சி – ஹெல உறுமய

352 0

தமிழ்த் தலைவர்களுக்கு இடையில் உள்ள அதிகாரப் போட்டியே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்வதற்கான முயற்சி என ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

ஜனநாயக முறையில் செயற்படுகின்ற தமிழ்த் தலைவர்களுக்கும், தீவிரவதத்ததை வலியுறுத்துகின்ற தமிழ்த் தலைவர்களுக்கும் இடையில் அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் விளைவாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இவ்வாறான ஒரு சூழல் உருவாகியுள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என நிசாந்த ஸ்ரீவர்ணசிங்ஹ குறிப்பிட்டுள்ளார்.