இலங்கையில் இன ஐக்கியத்தையும் நல்லுறவையும் பேணுவதற்கு மாணவர்கள் இன மத மொழி போதமின்றி கல்வி பயில வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் நுவரெலியா புனித திருத்துவ கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
இதற்கமைய இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற இன பேதமின்றி ஒரே பாடசாலையாக இயங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் இலங்கையில் இன ஐக்கியத்தையும் நல்லுறவையும் பேண முடியும் என கல்;வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.