இலங்கையில் மீன்பிடித்த ரஷ்ய நாட்டவர்கள் கைது

223 0

பலபிட்டிய கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு வெளிநாட்டவர்களை கடல்வளப் பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

ரஷ்ய நாட்டவர்களான இவர்கள் வாடகைக்காக பெறப்பட்ட படகொன்றை பயன்படுத்தியே சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இவர்களால் பயன்படுத்தப்பட்ட இரண்டு விசேட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.