தமது நாட்டுக்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கையிடம் கோரவில்லை – சீனா

257 0

இலங்கையில் முதலீடு செய்வதற்கு தமது நாட்டுக்கு மாத்திரமே சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று ஒருபோதும் கோரவில்லை என சீனா தெரிவித்துள்ளது.

சீன வெளி விவகார அமைச்சின் பேச்சாளரான ஹூவா சுன்யிங் ஊடக சந்திப்பொன்றில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஊடவியலாளர்களால் ஹம்பாந்தோட்டை துறைமுக எதிர்ப்பு விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

ஹம்பாந்தோட்டை வத்தக வலய திட்டங்களின் மூலம் நீண்டகால அபிவிருத்தி நடவடிக்கைக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இரண்டு நாடுகளும் பாரம்பரிய நட்பு நாடுகள் என்றவகையில் சீனா இலங்கைக்கு பெருமளவில் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் தயாராகவுள்ளதாக பேச்சாளரான ஹூவா சுன்யிங் குறிப்பிட்டுள்ளார்.