கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவைக்கு மசகு எண்ணெயை கொண்டுச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவு திருத்தப்பட்டு வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிச்சக்தி துறை பிரதி அமைச்சர் சந்திம வீரகொடி இதனை தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் வேளையில் துறைமுக வளாகத்தில் உள்ள குழாயில் சேதம் ஏற்பட்டது.
இதனையடுத்து மசகு எண்ணெய் கொண்டுச் செல்லும் நடவடிக்கைகள் தற்காலிகமாக
இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.