ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரிக்க ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் கோரிக்கை

398 0

ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் சிலர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் கண்டியில் முன்னெடுக்கப்பட்டது.

அரச பணியாளர்களுக்காக வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் படிப்படியாக குறைவடைந்து வருவதாக, ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் சங்கங்கத்தின் உறுப்பினரான வணக்கத்துக்குறிய அகுனவில கஸ்சப்ப தேரர் குறிப்பிட்டார்.

அரச பணியாளர்களின் வேதனத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், குறைந்த பட்சம் ஓய்வூதியகாரர்களின் கொடுப்பனவுகளை ஓரளவேனும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.