பேருந்து சாரதிகள் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சாரதிகள் அழைத்து வரப்படவேண்டும் என கோரப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்தின இதனை தெரிவித்தார்.
விரைவில் இதற்கான யோசனை ஒன்றை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சாரதிகள் இல்லாமல் அதிகளமான பேருந்துகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தமக்கு முறையிட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குறைந்தபட்சம் ஆயிரம் சாரதிகளின் பற்றாக்குறை காணப்படுகின்றது.
இதற்கு முக்கிய காரணம் அதிக வாகன நெரிசல் நிலையால் சாரதிகள் பணிகளில் ஈடுபட அக்கறை செலுத்தாமல் உள்ளனர்.
இந்தநிலையில், இந்தியாவில் இருந்தாவது சாரதிகளைச் கொண்டு வந்து பணியில் அமர்த்துமாறு பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் விரைவில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த உள்ளதாகவும் கெமுனு விஜேரத்தின குறிப்பிட்டார்.