ஜாலிய விக்கிரமசூரியக்க தொடர்ந்தும் விளக்கமறியல்

266 0

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை, 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டார்.

அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவராக கடமையாற்றிய காலப்பகுதியில் அரச பணத்தை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஜாலிய விக்கிரமசூரிய தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுவருகின்றார்.

குறித்த வழக்கு விசாரணையின் போது, ஜாலிய விக்கிரமசூரிய சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை மனு கோரிக்கையையும் நீதவான் நிராகரித்தார்.