தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டார் – விக்ரமபாகு கருணாரத்ன

308 0

நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டதாக நவசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய விக்ரமபாகு கருணாரத்ன, தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு எக்நெலிகொட தயாராக இருந்ததாகவும், யுத்தத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டுமென்று வலியுறுத்தி வந்ததாகவும் கூறினார்.

விச வாயுக்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டதாக கூறினார்.

பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் ஜனநாயக ஆட்சி ஒன்றை ஏற்படுத்தினால் அந்த அரசாங்கமும் இந்த நாட்டில் சாதாரண யுத்தம் ஒன்றே நடைபெற்றதாகவும், சட்டவிரோதமாக எதுவும் நடைபெறவில்லை எனவும் கூற முயற்சிக்கின்றது என்று விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.