ஜனாதிபதிக்கு அழைப்பு

245 0

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னிணியின் மாநாட்டில், பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இருக் கட்சிகளினதும் மாநாடும் வெள்ளி விழாவும், எதிர்வரும் 25 – 26ஆம் திகதிகளில் நுவரெலயாவில் நடைபெறவுள்ளது.

இவ்விரு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளுமாறு கோரியே, ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் மற்றும் முன்னணியின் நிதிச்செயலாளரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமார் ஆகியோர் உள்ளடங்கியக் குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று காலை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளதுடன் அழைப்பிதழையும் வழங்கியுள்ளனர்.