கொள்ளை , கொலைகளுக்கு உதவிய கட்சியே தமிழ் தேசிய கூட்டமைப்பு-டிலான்

265 0

தமிழ் தேசிய கூட்டமைப்பானது கொலை,கொள்ளைகள் புரிந்த குழுக்களுக்கு வெளிப்படையாகவே உதவி புரிந்தவர்கள் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தனிப்பட்ட ரீதியில் எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்ற போதும் அவரது கட்சியைச் சேர்ந்த குழுக்கள் பட்டபகலில் வங்கிகளில் கொள்ளையிட்டு,கொலைகளை செய்துள்ளதாகவும் அவர் இன்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தவறு செய்யும் அரசியல்வாதிகள் சிறைக்கு செல்வதும்,அடுத்த நாளே வெளியே வருவதும் வாடிக்கையான செயலாகிவிட்டதாகவும் எனவே அரசியல்வாதிகள் தண்டனையில் இருந்து தப்பிவிடுவதாகவும் எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பில் இன்றைய ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேளிவிக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பானது இவற்றைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது