யாழ். வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பம்!

245 0

எட்டாவது யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று (27) ஆரம்பமாகவுள்ளது.

‘வடக்கின் நுழைவாயில்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த கண்ணாட்சி இன்று முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் நிறுவனம், யாழ் கைத்தொழில் வர்த்தக பேரவையுடன் இணைந்து இந்த கண்காட்சிக்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த வருடத்தில் நடத்தப்பட்ட கண்காட்சியில் 200 கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இம்முறை 300க்கும் மேற்கட்ட கண்காட்சி கூடங்கள் இடம்பெறவிருப்பதாக கண்காட்சி இணைப்பு தலைவரும் முன்னாள் யாழ் வர்த்தக கைத்தொழில் பேரவையின் தலைவருமான கே. பூரணசந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த கண்காட்சி மற்றும் வர்த்தக சந்தையில் சிங்கப்பூர் இந்தியா மலேசியா சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப துறை, நிதிசேவைகள், ஆடைத்தொழிற்துறை, கட்டிடத்துறை, மருத்துவத்துறை, உணவு, குளிர்பானங்கள், பொதியிடல் தொழிற்துறை, வாகன தொழிற்துறை விவசாயம் பாவனையாளர்களுக்கான பொருட்கள் உள்ளிட்டவை இந்த 3 நாள் கண்காட்சியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.