காலி – கொழும்பு பிரதான வீதி மூடப்படவுள்ளது.

203 0

காலி – கொழும்பு பிரதான வீதி நாளை மறுதினம் இரவு மூன்று மணித்தியாலங்களுக்கு மூடப்படவுள்ளது.

பேருவளை – பரமணியாராம விகாரையின் வருடாந்த பெரஹர உற்வத்தின் காரணமாக குறித்த வீதி மூடப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து காலி நோக்கிச் செல்லும் வாகனங்கள், பேருவளை காவல்துறை நிலையத்துக்கு அருகிலுள்ள வீதி ஊடாக எம்பிலிபிட்டிய, கருணாசேனபுர ஊடாக பிங்ஹேன கந்த விகாரை ஊடாக காலி வீதிக்கு பிரவேசிக்க முடியும்.

காலியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள், காலி வீதியில், மொரகல – மாரகஹ பகுதிக்கு அருகில் இடது பக்கமாகத் திரும்பி கடற்கரை வீதி ஊடாக மீண்டும் காலி வீதிக்கு பிரவேசிக்க முடியும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.