மனனை விடுதலை செய்யுங்கள் – அற்புதம்மாள் முதல்வரிடம் கோரிக்கை

248 0

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்டோரை விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரறிவாளனின் தாயாரான அற்புதம்மாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்ச் செல்வத்தை சந்தித்தார்.

தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போதே இந்த கோரிக்கையை முதல்வரிடம் அற்புதம்மாள் விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் அற்புதம்மாள் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில், தமது மகன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படுவர் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2 முறை அறிவித்தார்.

எனினும் அது தடைபட்டுவிட்டது. இனிமேலும் தடையாகக் கூடாது எனவும் அற்புதம்மாள் கோரியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் இந்த விடயத்தில் என்ன செய்ய முடியும் என்பது குறித்து தாங்கள் ஆலோசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.