இலங்கை சட்டத்தரணி நியூசிலாந்தில் மரணம்

283 0

நியுசிலாந்தில் தீ விபத்தில் உயிரிந்த இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட சட்டத்தரணியான கைலாஸ் தனபாலசிங்கத்தின் இறுதிகிரிகை நேற்று நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்ததாக நியுசிலாந்தின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நியுசிலாந்தின் ஒக்லேண்டில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற தீ விபத்தில் அவரது மனைவி, ஐந்து வயதான மகன் மற்றும் மாமியார் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக அவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த குறித்த சட்டத்தரணியும் உயிரிழந்தார்.

தற்போது அவரது 11 வயதான மகள் மாத்திரமே அவரது குடும்பத்தில் எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.