திருகோணமலையில் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் அருட்தந்தையின் உடல் நல்லடக்கம்

169 0

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி பகுதியில் நேற்று முன் தினம் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த அருட்தந்தையின் உடல் இன்று காலை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு கண்ணீருக்கு மத்தியில் அருட்தந்தையின் உடலுக்கு விடை கொடுத்துள்ளனர்.

றத்மலை பகுதியிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனமும், வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற காரும் மோதியதிலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

குறித்த சம்பவத்தில் திருகோணமலை – அன்புவழிபுரம் சதா சகாய மாதா ஆலய பங்கு தந்தையான கனேஷபிள்ளை நிதிதாசன் (49 வயது) என்பவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர்,  கொழும்பு துணை ஆயர் மற்றும் பல மறைமாவட்ட ஆயர்கள் பங்கேற்றிருந்தனர்.

மேலும், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் ஏனைய மதத்தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.