இந்தியாவில் தொடரூந்து விபத்து – 32 பேர் பலி

246 0

download (2)இந்திய ஆந்திர பிரதேசத்தில் ஷில் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் குறைந்தது 32 பேர் பலியாகினர்.

இது தவிர மேலும் 54 பேர் காயமடைந்த நிலையில் அருகாமையில் உள்ள மருத்துவ மனைகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாக கிழக்கு கரையோர தொடரூந்து அதிகாரி ஜே.பீ. மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

குனேரு தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் எஜ்சினும் ஏழு பயணிகள் பெட்டியும் தடம்புரண்டதன் காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இடிபாடுகளுக்கு இடையே மேலும் பலர் அகப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள மீட்பு பணியாளர்கள், இதன் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை உயரலாம் என கவலை வெளியிட்டுள்ளனர்.

தடம்புரண்டதற்கான காரணம் குறித்து அறியும் நோக்கில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த நொவம்பர் மாதம் உத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற பிறிதொரு தொடரூந்து தடம்புரண்ட போது 140 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.