கொழும்பு கோட்டையிலிருந்து மாத்தளை நோக்கிச் செல்ல புதிய எக்ஸ்பிரஸ் புகையிரத சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விசேட போக்குவரத்து சேவை வார இறுதியிலேயே அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிணங்க,வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2.20 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புதிய எக்ஸ்பிரஸ் புகையிரதம் புறப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்,புகையிரதம் மாலை 7.03 மணியளவில் மாத்தளையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த புகையிரதம் மீண்டும் சனிக்கிழமை காலை 6.40 மணியளவில் மாத்தளையில் இருந்து புறப்பட்டு காலை 11.15 மணியளவில் கொழும்பை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் 240 பயணிகள்,பயணிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.