மறைந்த மாதுலுவாவே சோபித தேரர் பயன்படுத்திய சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான சொகுசு மோட்டார் கார் காணாமல் போயுள்ளதாக கூறப்படுவது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து மிரிஹான பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவத்துள்ளது.
கோட்டே நாக விகாரையின் உடதளகந்தே ஆரியரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏழு மாதங்களாக அந்த வாகனத்தை காணவில்லை என்று முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது