ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தால் 27 நிபந்தனைகள்- மஹிந்த சமரசிங்க

242 0

samarasingeஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தால் 27 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த மஹிந்த சமரசிங்க, ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தால் 27 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தால் 27 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எனினும், அவை அனைத்துக்கும் இலங்கை ஒத்துப்போகவில்லை என்று திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்வதற்காக, 58 நிபந்தனைகளுக்கு இலங்கைஉடன்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு, முன்னைய ஆட்சிக் காலத்தின் போதே 27 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும், முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் இருந்த அரசியல் ரீதியான உறுதிப்பாடின்மை காரணத்தினாலேயே, இந்த நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஏற்ற நிபந்தனைகளுக்கு மாத்திரமே ஒத்துழைப்பு வழங்கப்படுமே தவிர, அனைத்துக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படாது என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.

2017 ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள மனித உரிமை செயற்றிட்டம் பற்றி, அமைச்சரவைக் கூட்டத்தின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக கூறிய அமைச்சர், இது ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்குரிய நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட்டள்ளதாக கூறினார்.

இது தொடர்பான அறிக்கைகளை தயாரிப்பதற்கு, அமைச்சரவை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.