சட்டவிரோதமாக தனுஷ்கோடி சென்ற இலங்கை இளைஞர் கைது

247 0

50496277baotrefugeeமர்மப் படகில் வந்து தமிழகத்தின் தனுஷ்கோடியில் ஊடுருவிய இலங்கை இளைஞரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று அதிகாலை தனுஷ்கோடி சாலையில் நடந்துவந்த ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் பொலிசார் விசாரித்தனர். இதில் அவர் இலங்கை வவுனியாவைச் சேர்ந்த ரோஷன், (28) என்பது தெரியவந்தது.

இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருடன் அகதியாக தமிழகம் வந்துள்ளார். பின்னர் லண்டன் சென்றுள்ளார். அங்கு சில ஆண்டுகள் தங்கிய பின் மீண்டும் தமிழகம் வந்துள்ளார். இதற்கிடையே இலங்கை திரும்பிய அவரது தந்தை ராபர்ட் சுமன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

அவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கை சென்ற ரோஷன், 16வது நாள் காரியம் முடிந்ததும் நேற்று அதிகாலை படகில் தமிழகம் திரும்பியுள்ளார். இவரை தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனையில் இறக்கிவிட்ட பின் அந்த படகு இலங்கை திரும்பியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

அவரை பொலிசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இலங்கை இளைஞர் ஊடுருவல் சம்பவத்தால் இராமேஸ்வரம், தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது, என தமிழக ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.