சீ.எஸ்.என் தாக்கல் செய்த மனு 16ம் திகதி விசாரணை

214 0

vodafone-wins-transfer-pricing-battle-against-i-t-departmentசீ.எஸ்.என் தொலைக்காட்சியின் அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிராக அந்த நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் 16ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதுவரை இரத்துச் செய்யப்பட்ட அனுமதிப்பத்திரம் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என, நீதிமன்றம் பிரதிவாதிகள் தரப்புக்கு தெரியப்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நியாயமான விசாரணைகள் இன்றி, அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டமை சட்டத்துக்கு முரணானது என, மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தில் இதன்போது குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரால் வௌியிடப்பட்ட குறித்த அறிக்கை சட்டத்துக்கு முரணானது என உத்தரவிடுமாறும் அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரினார்.