பதில் பொலிஸ்மா அதிபராக விக்ரமரத்ன

212 0

Capture1046-300x160ஆசிய வலயத்திற்கான பொலிஸ் பிரதானிகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர நேபாளத்திற்கு சென்றுள்ளார்.
இதற்கமைய நேற்றையதினம் இவர் நேபாளம் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், அவர் நாடு திரும்பும் வரை, பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.