கனடாவில் இருந்து ஈழத் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்படவுள்ளார்

266 0

ca-lgflagகனடாவில் இருந்து ஈழத் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்படவுள்ளார்.

மாணிக்கவாசகம் சுரேஷ் என்ற அவர் மீது, விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தமை மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவரது உத்தரவின் அடிப்படையிலான செயற்பாடுகளை கனடவில் முன்னெடுத்தமை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, கடந்த 2 தசாப்தங்களாக அவர் நாடுகடத்தல் உத்தரவுக்கு எதிராக வழக்காடி வந்தார்.

எனினும், அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னார்வமாக இணைந்து செயற்பட்டமை மற்றும் கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான உலக தமிழர் இயக்கத்துடன் இணைந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டமை போன்றவற்றுக்கான ஆதாரங்களை கனடாவின் குடிரவு சபை முன்வைத்தது.

இதன்படி அவரது நாடுகடத்தல் உத்தரவை கனடாவின் நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.