ஈரானிடமிருந்து மசகு எண்ணை இறக்குமதி செய்ய இலங்கை விருப்பம்

240 0

iran-Srilankaஈரானிடமிருந்து மசகு எண்ணை மற்றும் எரிதிரவத்துடன் தொடர்புடைய பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்ய இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஈரான் வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜவாட் ஷரீபை தெஹ்றானில் வைத்து சந்தித்துள்ளார்.

இதன்போது இலங்கையின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார்.

நிதி தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட பின்னர் இரண்டு நாடுகளும் எரிசக்தி தொடர்பில் கூட்டாக செயற்படுவதற்கும் ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை உட்பட ஆசிய பிராந்திய நாடுகளுடன் அபிவிருத்தி தொடர்பில் முக்கியத்துவம் வழங்கி செயற்படுவதற்கு ஈரான் தயாராக இருப்பதாகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகளின் காரணமாக இலங்கைக்கான ஏற்றுமதியில் தடைகள் நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது.