நாட்டில் பயன்பாட்டிலுள்ள நாணயத்தாள்களை சேதப்படுத்தி மாற்றங்களை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது புழக்கத்திலுள்ள நாணயத்தாள்களை சிறந்த முறையில் பேணுவதே இதன் நோக்கமாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கென இந்த ஆண்டு பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நாணய குற்றிகளை வெளியிடுதல் தொடர்பில் முறையான நடைமுறைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
2017ஆம் ஆண்டில் புதிய நாணய குற்றிகளை வெளியிடவும் மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.