பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை

374 0

sssssssssssss1இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற நிலையில் பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்பு காலத்தில் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன இதனை தெரிவித்தார்.

இதற்கமைய, குறித்த இராணுவ வீரர்களை கைதுசெய்வதற்கான அதிகாரம் காவல்துறையிடமும், குடிவரவு குடியகழ்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 42 ஆயிரத்து 500 இராணுவ வீரர்கள் பொதுமன்னிப்பு காலத்தில் இராணுவத்தில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.