பிரித்தானியர் ஆட்சிக் காலத்தின்போது ஊவா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நாசகார செயற்பாடுகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
பிரித்தானியர் ஆட்சி காலத்தில் ஊவா மாகாணத்தில் பல இயற்றை சீரழிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.