போலிச் செய்திகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை

152 0

தன்னைத் தொடர்புபடுத்தி  முன்னெடுத்துச் செல்லப்படும் போலி பிரசாரங்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து உரம் இறக்குமதி செய்யப்படுவதற்காக, தனியார் வங்கி கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளமைத் தொடர்பில், எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை மேற்கோளிட்டு, சில ஊடகங்கள், ஜனாதிபதியின் செயலாளரை இலக்கு வைத்து, போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

எனவே, அந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.