எதிர்ப்பு நியாயமான முறையில் இருக்க வேண்டும் – அரசாங்கம்

246 0

vijithamuni20160310நியாயமான முறையில் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தாமல், ஒழுக்கயீனமான முறையில் எதிர்ப்புக்களை வெளிப்படுத்துகின்றவர்களுக்கு ஏற்றவகையில் பதில் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இதனை தெரிவித்தார்.

சீன நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் கைத்தொழில் வலய ஆரம்ப நிகழ்வில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நோக்கில் முறையற்ற வகையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எதிர்ப்புக்களை வெளியிடுவதற்கு என சில ஒழுங்கு விதிகள் உள்ளன.

எனினும் ஹம்பாந்N;தாட்டையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் அந்த ஒழுங்குவிதிகளை மீறும் வகையில் அமைந்திருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமது கருத்தினை முறையாக வெளிப்படுத்திய ஜே வி பியினருக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.