விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அதிகார சபை உருவாக்கப்படவுள்ளது.

322 0

susil-premajayanthaவிஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அதிகார சபை ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் விஞ்ஞான தொழிநுட்பத் துறையை ஒருங்கிணைப்பு செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய 21 அமைச்சுக்கள் மற்றும் 80 ஆய்வு நிறுவனங்கள் அந்த அதிகாரசபைக்குள்ள ஒருங்கிணைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.