அபராதம் குறித்து ஆராய்வு – காவல்துறை மா அதிபர்

231 0

poojitha-jayasundara-555-615x3467 வகையான போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுவது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெறுவதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததன் பின்னர் இந்த திட்டம் அமுல் படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

புது வருடத்தை ஒட்டி காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.

சட்டத்தை மதித்து செயல்படும் மக்களுக்கு இந்த புதிய அபராத முறை பாதிப்பை ஏற்படாது என தெரிவித்த அவர், சட்டத்தை மதிக்காதவர்களே பாதிப்படைவர் என அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய முறைமையினை அமுல்ப்படுத்துவதன் மூலம் காவல்துறையினர் போக்குவரத்து ஒழுங்கை விபத்து அற்ற முறையில் பேண ஏதுவாக இருக்கும் என காவல்துறை மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.