மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமான மற்றுமொரு உயர் மட்ட பேச்சு வார்த்தை இன்று கொழும்பில் இடம்பெற்றது.
இந்திய அமைச்சர் ராதா மோகன் சிங் மற்றும் இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு இடையே அமைச்சு மட்டத்தில் இந்த பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன.
கடந்த டிசம்பர் 31ஆம் திகதி புதுடெல்லியில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போது, மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டதாக, இருதரப்பினராலும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிறந்தர தீர்வொன்றை காணும் முகமாக பொறிமுறை ஒன்றினை காண்பது குறித்து இரு தரப்பினரும் இன்றைய கூட்டத்தின் போது விரிவாக ஆராய்ந்துள்ளனர்.
இரு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதற்கு ஏற்ற வகையில் நீதி முறைமைகளை துரிதப்படுத்தவும் இரு தரப்பினரும் இனங்கியுள்ளனர்.
இரு நாட்டின் கரையோர காவல்படையினரும் ரோந்து நடவடிக்கைகளை அதிகரிப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.