சசிகலாவுக்கு முதலமைச்சர் பதவி தரவேண்டும் – தம்பித்துரை

272 0

800x480_image61148463ஜெயலலிதா ஜெயராமின் மறைவினை அடுத்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் பதவியை பொறுப்பேற்றுள்ள சசிகலா நடராஜனுக்கு, தமிழக முதலமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் லோக் சபை உறுப்பினரான எம். தம்பித்துரை இந்த யோசனையை முன்வைத்துள்ளர்.

மாநில அரச மற்றும் கட்சியின் அதிகாரம் இரண்டாக பிரிந்திருக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து தமிழக முதலமைச்சர் பதவிக்கு மாநில முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தமது பதவியில் இருந்து நீங்கி முதலமைச்சர் பதவியை சசிகலா நடராஜனுக்கு வழங்குமாறு தற்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிக அழுத்தங்கள் பிரயோகிக்கபடுவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.