பதவி விலகத் தயாராகும் இரு பிரதியமைச்சர்கள்?

350 0

987134736untitled-1தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனவரி இரண்டாம் வாரமளவில் இடம்பெறவுள்ளதென, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக, அமைச்சுப் பதவி வகிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த சந்திப்பின் போது, அரசாங்கத்தில் இருந்து விலகுவதா இல்லையா என்பது தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தக் கலந்துரையாடலின் பின்னர் புதிய வருடத்தின் முக்கிய அரசியல் தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இரண்டு பிரதியமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகத் தயாராகி வருவதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. எதிர்வரும் வாரத்தில் பெரும்பாலும் குறித்த இருவரும் பதவி விலகலாம் எனவும் தெரியவந்துள்ளது.